மழைக்கால ஆஃபர்.. 100 கொண்டு வாருங்கள்.. ஆட்சியை பிடிக்கலாம்.. – அகிலேஷ் யாதவின் ரகசிய பதிவு..

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பேட்டியில், “உத்தரபிரதேச துணை முதலமைச்சர் மவுர்யா முதலமைச்சராக வேண்டும் என்று கனவு கண்டிருந்தார். அவர், 100 எம்.எல்.ஏ-க்களை கண்டிப்பாக பெற வேண்டும். அதன்பிறகு, சமாஜ்வாதி கட்சி, அவர் முதலமைச்சராக ஆதரவு தரும்” என்று கூறியிருந்தார்.

இவர் இவ்வாறு பேட்டி கொடுத்து பல நாட்கள் ஆன நிலையில், தற்போது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கும், துணை முதலமைச்சர் மவுர்யாவுக்கும் இடையே, உட்கட்சி பூசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மழைக்கால ஆஃபர்.. 100 எம்.எல்.ஏ-க்களை கொண்டு வாருங்கள்.. அரசாங்கத்தை அமையுங்கள்” என்று கூறியுள்ளார். இவரது இந்த ரகசிய குறிப்பு, மவுர்யாவுக்கானது என்று, நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News