இந்தியா
குஜராத் டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி! இது உண்மைதானா ?
காந்திநகர், குஜராத் மாநிலத்தில் பூரணமான மதுவிலக்கு அமலில் உள்ளது. அம்மாநிலத்தின் காந்திநகர் மாவட்டத்தில் டெக் சிட்டி அமைந்துள்ளது. இது இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படுகிறது. மேலும் சர்வதேச நிதி சேவை மையமாகவும் கருதப்படுகிறது. ஆரக்கிள், சைரில், மற்றும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் டெக் சிட்டியில் அமைந்துள்ளன.
இந்நிலையில், டெக் சிட்டியில் உள்ள ஒட்டல் , ரெஸ்டாரண்ட்,கிளப்புகளில் மதுபானம் அருந்த குஜராத் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. டெக் சிட்டியில் பணிபுரியும் நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட பகுதியில் மதுபானம் அருந்த அனுமதி உள்ளதாம்.ஆனால், அங்கிருந்து வாங்கிச்செல்ல அனுமதி கிடையாது எனக்கூறப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.