கள்ளக்குறிச்சி: விஷச்சாராய உயிரிழப்பு 34-ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருதி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரை பகுதியில் நேற்று முன்தினம் (ஜூன் 18) கள்ளச்சாராயத்தை குடித்தவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழந்தனர்.

இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

கருணாபுரம், ஏமப்பேர், வீரசோழபுரம், சிறுவங்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜூன் 19) உயிரிழந்திருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

70 மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனை, புதுச்சேரி, சேலம் அரசு மற்றம் தனியார் மருத்துவனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை மூன்று பேரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியை, விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு ஆகியோர் முகாமிட்டு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News