சேலம் மல்லமூப்பம்பட்டி வழியில் மூலக்கடை பேருந்து நிறுத்தும் வருகை உள்ள ராமகவுண்டனூரில் ஏலியன் சித்தர் கைலாய சிவன் கோயில் உள்ளது.
அந்தக் கோயிலை அதே பகுதியைச் சேர்ந்த சித்தர் பாக்யா என்ற லோகநாதன் (45)முக்கால் ஏக்கர் நிலத்தில் அமைத்து உள்ளார்.
சிவலிங்கத்தில் இருந்து பூமிக்கு அடியில் 11 அடி ஆழத்தில் அவரது குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமாதி அமைந்துள்ள பகுதியில் ஏலியன் சித்தர் மற்றும் அகத்தியர் முனிவர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
தினமும் நித்திய பூஜை செய்தாலும் லிங்கம், அகத்திய சித்தர் முனிவருக்கு தேய்பிறை, வளர்பிறை, பஞ்சமி திதியில் மாலை 6 மணிக்கு பூஜை நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.