தமிழகம்
நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவதாக அமைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வந்த அனைத்து முதல்வர்களும் அண்ணல் அம்பேத்கா் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து சென்றுள்ளதாகவும் புழல் பகுதியில் அமைந்துள்ள இந்த சிலை வரலாற்றின் சிறப்பு மிக்கது என்றும் இங்கு ஜாதி மத வேற்றுமைகளை களைந்து கட்சி வேற்றுமைகளின்றி அனைத்து மக்களும் ஒன்று கூடி ஒருமனதாய் அண்ணல் அவர்களின் பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடப்படுவதை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து அதிமுக மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு அவர்கள் மேளதாளங்களோடு ஊர்வலமாக சென்று அண்ணல் அவர்களுக்கு மாலை அணிவித்தார். இவரை தொடர்ந்து அமமுக கட்சியின் நிர்வாகிகளும் மற்றும் பல்வேறு கட்சியினை சேர்ந்தவர்கள் அண்ணல் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
You must be logged in to post a comment Login