Connect with us

Raj News Tamil

மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

தமிழகம்

மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 18-ந்தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே முதியவர் சுந்தரத்தை மாடு முட்டியது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 10 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top