ஒட்டகம் மிதித்து வட மாநில முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புதுக்குப்பம் கடற்கரையில் உள்ள தனியார் பொழுது போக்கு மையத்தில் ஒட்டகம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த மத்திய பிரதேசம் மாநிலம் பர்வாணியை சேர்ந்தவர் ரமேஷ் (67) என்பவர் ஒட்டகத்துக்கு தீவனம் போட்டுகொண்டிருந்தார்.
அப்போது அவரை எதிர்பாராத விதமாக ஒட்டகம் மிதித்து மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.