Connect with us

Raj News Tamil

ஆனந்த் மகேந்திராவை பிரம்மிக்க வைத்த முதியவர்! என்ன சொன்னாரு தெரியுமா?

இந்தியா

ஆனந்த் மகேந்திராவை பிரம்மிக்க வைத்த முதியவர்! என்ன சொன்னாரு தெரியுமா?

ஐ ஷைன் என்ற பாட்டுப் போட்டியை, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கடந்த ஆண்டு நடத்தியது. இந்த போட்டியில், கேரள மாநிலம் கன்னூர் பகுதியை சேர்ந்த டாக்டர் சுரேஷ் நம்பியார் என்ற 73 வயது முதியவர் கலந்துக் கொண்டிருந்தார்.

இனிமையான குரலை கொண்ட இவர், அந்த போட்டியில் பாடிய பாடல் ஒன்றின் வீடியோவை, பிரபல தொழிலபதிபர் ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த போட்டி நடைபெற்று பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், இது இப்போது தான் எனது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த முதியவருக்கு மிகவும் அழகான குரல் வளம் உள்ளது.

மேடையில் மிகவும் அருமையாக பெர்ஃபாமென்ஸ் செய்கிறார் என்று பாராட்டியுள்ளார். மேலும், நம்முடைய பேஷனுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பதை, இந்த வயதில் அவர் ஞாபகப்படுத்தி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

More in இந்தியா

To Top