தமிழகம்
அண்ணா நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள பதிவு, தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்!
இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்!
எண்ணித் துணிக கருமம்! என்றென்றும் அண்ணா எனக் குறிப்பிட்டுள்ளார்.