சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் 43-வது பட்டமளிப்பு விழா நாளை (5-ந்தேதி) காலை 10 மணிக்கு நடக்கவிருக்கிறது. இப்பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவுக்கு தலைமை தாங்கி பட்டங்களை வழங்கவுள்ளார் என்று தெரிகிறது. மேலும் ,நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன்பெரி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.