அண்ணாமலை ஜெயிப்பார்… சாவல் விட்ட பாஜக நிர்வாகிக்கு மொட்டை!

பாஜக மாநில தலைவர் தோல்வியடைந்ததை அடுத்து, பாஜக நிர்வாகி சாலையில் நடுவே அமர்ந்து மொட்டையடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கோவை தொகுதியில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாருக்கும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவியது.

பின்னர் திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 1 லட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையைத் தோற்கடித்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் பாஜக நலத்திட்ட பிரிவு பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த மாற்று கட்சி சேர்ந்த நண்பர்களிடம், அண்ணாமலை கோவை தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என அவர் சவால் விட்டுள்ளார்.

அண்ணாமலை வெற்றி பெறாவிட்டால் பரமன்குறிச்சி பஜார் பகுதியில் மொட்டை போட்டு ரவுண்டானாவை சுற்றி வருவேன் என ஜெய்சங்கர் சவால் விட்டிருந்தார்.

அண்ணாமலை மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, சவால் விட்ட ஜெய்சங்கர் சாலையில் அமர்ந்தபடி தனது தலையை மொட்டை அடித்து கொண்டார். பின்னர் அங்கேயே தன் மீது தண்ணீரை ஊற்றிக் கொண்ட ரவுண்டானாவை சுற்றி வந்தார். இனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News