Connect with us

Raj News Tamil

அன்னபூரணி பட விவகாரம் – வருத்தம் தெரிவித்த நயன்தாரா!

சினிமா

அன்னபூரணி பட விவகாரம் – வருத்தம் தெரிவித்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக திரைப்படத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஓடிடி தளத்தில் இருந்தும் இந்த படம் நீக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமும் மன்னிப்பு கேட்டிருந்தது. இந்நிலையில், நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதில், “கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்கமாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ‘ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது’ தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top