Connect with us

Raj News Tamil

பாஜக ஆட்சியை கவிழ்த்தவர் ஜெயலலிதா…அதிமுகவில் மீண்டும் இணைந்த அன்வர் ராஜா பேட்டி

அரசியல்

பாஜக ஆட்சியை கவிழ்த்தவர் ஜெயலலிதா…அதிமுகவில் மீண்டும் இணைந்த அன்வர் ராஜா பேட்டி

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக அன்வர் ராஜா பேசி வந்தார். இதனைத் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக அவர் பேட்டியளித்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் அன்வர் ராஜா மீண்டும் தன்னை இன்று இணைத்துக் கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எல்லோரோடும் ஒத்துப் போகாத ஒருவன் இறந்தவனுக்கு சமமாவான். ஒரு மிகப்பெரிய இயக்கம் அந்த இயக்கத்தை தோற்றுவித்ததில் ராமநாதபுரம் மாவட்டத்தில் என் பங்கு உண்டு.

எம்ஜிஆர் கட்சி தொடங்கும் பொழுது நான் ஒன்றிய கழகச் செயலாளர், மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர், சிறுபான்மை அணி செயலாளர், இப்படி எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கபட்டவன். அப்படி இருந்த சூழ்நிலையில் என் வாழ்வில் ஒரு சிறிய சறுக்கல். மீண்டும் இப்போது அதிமுகவில் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் இணைந்துள்ளேன். கட்சியின் சட்ட திட்டம் என்ன என்று தெரியும் கட்சியின் வளர்ச்சிக்கு நான் பாடுபடுவேன்.

பாஜக விமர்சனம்.

ஒரு கட்சியை விமர்சிப்பது என்பது வேறு கூட்டணி என்பது வேறு, இன்றும் கூட பாஜகவின் தலைவர்கள் அண்ணா திமுகவை விமர்சிக்க தான் செய்கிறார்கள். ஆனால் கூட்டணி என்பதை முடிவு செய்ய வேண்டியது இரு கட்சியின் தலைவர்கள். இதுவரை எல்லா கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ்சை தவிர. திமுக – பாஜக கூட்டணி பின்னி பிணைந்து இருந்தது., ஆனால் நாங்கள் அப்படியல்ல கொள்கைக்கு ஏதேனும் இடர்பாடு ஏற்படுமானால் உடனடியாக அந்த கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அண்ணா திமுக தயங்கியதில்லை, பத்து நாள் டெல்லியில் இருந்து தங்கி அங்கே பாஜக ஆட்சியை கவிழ்த்தவர் ஜெயலலிதா.

வருத்தம் இல்ல.

கட்சியில் இந்த ஒன்றை ஆண்டு, இல்லாமல் காலம் வருத்தம் அளிக்கவில்லை நான் கட்சிக்காரனாகத்தான் இருந்தேன், எல்லா கட்சிகாரகளும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள் அவர்களின் எல்லா விசேஷங்களுக்கும் சென்று கொண்டு தான் இருந்தேன்.

எந்த முக்கியதுவம் தேவை இல்லை.

என்னுடைய பெயர் என்னுடைய தோற்றம் எனது பெயரை அறிமுகப்படுத்திய எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் கொடுத்ததே மிகப் பெரிய அடையாளம்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு அதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்

More in அரசியல்

To Top