தமிழகம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதேபோல சிபிஎஸ்சி மாணவர்களுக்கு வருகிற 12-ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து 2024 – 2025 கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக இன்று முதல் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை இளநிலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் www.tngasa.in என்கிற இணையதளம் மூலம் பெறலாம்.
மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.