Connect with us

Raj News Tamil

சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன்: பிரதமர் மோடி!

இந்தியா

சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன்: பிரதமர் மோடி!

ஆகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்கங்கள் தினத்தையொட்டி சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் உழைக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்” என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:

“உலக சிங்கங்கள் தினம் என்பது கம்பீரமான சிங்கங்களைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும். ஆசிய சிங்கங்களின் வாழ்விடமாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை மேலும் பாதுகாத்து பல தலைமுறைகளை உருவாக்குவோம். சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் உழைக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top