சினிமா
ரஜினிக்கு பாராட்டு விழா..! சத்தமில்லாமல் நடக்கும் வேலைகள்..!
கோலிவுட்டின் முன்னணி ஆளுமையாக வலம் வருபவர் ரஜினிகாந்த். சுமார் 45-ஆண்டுகளாக திரை வாழ்வில் இருக்கும் இவருக்கு, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவரது ரசிகர்கள் இணைந்து சென்னையில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மனிதம் காத்து மகிழ்வோம் என்ற பெயரில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த, ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் மேயர் பிரியாவிடம் அனுமதி வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேபோன்று சென்னை காவல் ஆணையத்திலும் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிகிரது. இந்த மாநாட்டில் ரஜினியின் சகோதரர் நாரணரவ் , கலைப்புலி தானு, சைதை துரைசாமி உள்ளிட்ட ,தமிழகம் முழுவதும் 10-ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login