பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தளபதி,நாயகன் , பொன்னியின் செல்வன் என பல வெற்றி படங்களை தந்தவா் இயக்குநா் மணிரத்னம் .
இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் .நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணையவுள்ள படம் இதுவே ஆகும் .பல்வேறு எதிா்பாா்ப்புகளை தாண்டி உருவாகவுள்ள இப்படத்தின் அப்டேட்டானது தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படத்தின் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் திரிஷா ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.அப்படி நடந்தால் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாக இந்த படம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.