Connect with us

Raj News Tamil

மதுபான பாரில் ஏற்பட்ட தகராறு: 21 வயது இளைஞன் கொலை!

தமிழகம்

மதுபான பாரில் ஏற்பட்ட தகராறு: 21 வயது இளைஞன் கொலை!

ஈரோடு அருகே, மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் 21 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள முனியப்பன் பாளையத்தைச் சேர்ந்தவர் 21 வயதான ஹரிஷ் குமார்.

பிளம்பரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துவந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அங்கிருந்த மதுபான பாரில் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் வெள்ளியங்கிரி ஹரிஷ் குமாரை கத்தியால் குத்தினார்.

மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படும் வழியில் ஹரிஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top