Connect with us

Raj News Tamil

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது..!

தமிழகம்

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது..!

தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( 75). இவர் பார்மசி படித்துள்ளார். தஞ்சாவூர் நகரம் நகராட்சியாக இருந்தபோது மருந்து ஆளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் சுப்பிரமணியன் தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் கிளினிக் வைத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர் பார்மசி முடித்துவிட்டு தனக்கு உள்ள அனுபவத்தின் அடிப்படையில் பொதுமக்கள் சிலருக்கு சிகிச்சையும் அளித்ததாக தெரிகிறது.

எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் எழுந்தது. இது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திலகம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று
விசாரணை செய்து அவர் வைத்திருந்த கிளினிக்கை மூடி சீல் வைத்தனர்.

மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்ததாக சுப்பிரமணியனை கைது செய்தனர். போலி மருத்துவர் கைது செய்யப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top