தமிழகம்
பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக; ஒரு இலட்சம் ரூபாய் மானியம்!
தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டில், பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக 2024 2025-ஆம் ஆண்டில், 100 இளைஞர்களுக்கு வங்கிக்கடன் உதவியுடன் கூடிய ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காகப் பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் மானியம் வழங்கிட, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.