Connect with us

Raj News Tamil

ஆசிய போட்டிகள் : வெண்கல பதக்கத்துடன் வெளியேறிய இந்திய குத்துச் சண்டை வீராங்கனை ப்ரீத்தி பவர்!

விளையாட்டு

ஆசிய போட்டிகள் : வெண்கல பதக்கத்துடன் வெளியேறிய இந்திய குத்துச் சண்டை வீராங்கனை ப்ரீத்தி பவர்!

ஆசிய கண்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்-வீரங்கனைகளுக்காக ஆசிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆசிய போட்டிகளில் இடம்பெற்றுள்ள குத்துச் சண்டை விளையாட்டின், அரை இறுதி ஆட்டம், நடைபெற்றது.

இந்த அரை இறுதி ஆட்டத்தில், சீனாவை சேர்ந்த சேங் யுவானும், இந்தியாவை சேர்ந்த ப்ரீத்தி பவாரும் மோதிக் கொண்டனர்.

இந்த போட்டியில், சீனா நாட்டை சேர்ந்த சேங் யுவான், ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், விட்டுக் கொடுக்காமல் விளையாடிய ப்ரீத்தி பவார், தன்னால் முடிந்த வரை, ஈடு கொடுக்க முயற்சி செய்தார்.

ஆனால், ஆட்டத்தின் இறுதியில், 0-5 என்ற கணக்கில், சீனா நாட்டை சேர்ந்த சேங் யுவான் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.

மேலும், ப்ரீத்தி பவார் ஆசிய விளையாட்டுக் போட்டிகளில் இருந்து, வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார்.

More in விளையாட்டு

To Top