அஸ்ஸாம் மாநில உள்துறை செயலாளர் தற்கொலை.. காரணம் மனைவியா?

2009-ஆம் ஆண்டு பேட்சில், ஐ.பி.எஸ் அதிகாரியானவர் ஷில்லாதித்யா சேட்டியா. இவர் தற்போது, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்துறை செயலாளராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவியான அகோமோனி, ஸ்டேஜ் 4 புற்றுநோயில் பாதிக்கப்பட்டு, பல வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தின்போது, சேட்டியாவின் மனைவி, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சேட்டியா, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்துக் கொண்டார்.

ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், மருத்துவமனையில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News