தமிழகம்
திருவண்ணாமலையில் ஏ.டி.எம். மிஷினை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை..!
திருவண்ணாமலையில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். மிஷினை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோர பகுதிகளில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஏடிஎம் கொள்ளை சம்பவம் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது மாவட்ட எல்லைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login