Connect with us

Raj News Tamil

மியான்மர் முன்னாள் அதிபருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை..!

உலகம்

மியான்மர் முன்னாள் அதிபருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை..!

கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

இதையடுத்து ஆங் சான் சூகி பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இயற்கை பேரழிவுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், ராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதனால் ஆங் சாங் சூகிக்கு மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க சூழல் ஏற்பட்டுள்ளது. ஆங் சான் சூகியை விடுதலை செய்ய ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்திய நிலையில், அவருக்கு கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top