உலகம்
60 பேருக்கும் ஒரே முக ஜாடையில் குழந்தை.. பலே வேலை பார்த்த ஆண்.. ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன?
ஆஸ்திரேலியாவை சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள், விந்தனு தானத்தின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். குழந்தைகள் பிறந்து, நீண்ட வருடங்கள் கழித்து, சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சிக்கு, தன்பாலின தம்பதிகள், தங்களது குழந்தைகள் உடன், வந்திருந்தனர். அப்போது, அங்கு வந்த அனைத்து குழந்தைகளும், ஒரே மாதிரியான முக ஜாடைகளுடன் இருந்ததை கண்டு, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகு, இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஒரே நபர், 60-க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு, வேறுவேறு பெயரில், விந்தனுவை தானமாக வழங்கியது தெரியவந்தது. குற்றம் செய்தவர் யார் என்பது கண்டறியப்பட்டாலும், அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login