Connect with us

Raj News Tamil

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்கும் விழா நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதில் பங்கேற்க ஆயிரம் காளைகள் மற்றும் 800 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர் தலா ஒரு கார் என 2 கார்கள் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டி பாதுகாப்பாக நடக்க 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

More in தமிழகம்

To Top