சினிமா
அயலான் 2 கன்ஃபார்ம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நேற்று இன்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். இந்த படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனை வைத்து, அயலான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
5 ஆண்டுகால பிரச்சனைக்கு பிறகு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும், குடும்ப ஆடியன்ஸை கவர்ந்த இப்படம், வசூலில் நல்ல லாபம் பார்த்தது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகளை மேற்கொண்ட PhantomFX நிறுவனம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அயலான் இரண்டாம் பாகத்திற்கான பணிகளின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், சிவகார்த்திகேயன் முதன்முறையாக தன்னுடைய இரண்டாவது பாக திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)