Connect with us

Raj News Tamil

கோயம்பேட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை நாளை திறப்பு!

தமிழகம்

கோயம்பேட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை நாளை திறப்பு!

கோயம்பேடு ஆயுதபூஜை சிறப்பு சந்தை நாளை (அக்.18) திறக்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயதபூஜை ஆகிய விழாக் காலங்களில், பண்டிகைகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களை ஒரே இடத்தில் மலிவு விலையில் வாங்க, மலர் சந்தை வளாகத்தில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இதற்கு கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலமாக நடத்தப்பட்டு வந்தது.

கோயம்பேடு சந்தை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள், சாலை பணிகள் நடைபெற்று வருவதால், தற்போது ஏலம் விட்டு ஒப்பந்ததாரர் மூலமாக நடத்தாமல், சந்தை நிர்வாகமே நேரடியாக நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, கோயம்பேடு உணவு தானிய வளாகத்தில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை நாளை (அக்.18) திறக்கப்படுகிறது. இந்த சந்தையில் பண்டிகைகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களை மொத்த விலையிலும், சில்லறை விலையிலும் விற்கப்பட உள்ளன.

இந்த சந்தை வரும் அக்.27-ம் தேதி வரை செயல்பட உள்ளது. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், திருட்டைத் தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க காவல் துறைக்கு சந்தை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top