இந்தியா
பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு – மத்திய இணையமைச்சரின் பேச்சால் சர்ச்சை
பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே-வில் நடந்த குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து வருபவர்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனவும் கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள ‘மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர்’ என்பது போன்ற சர்ச்சை கருத்துக்களை அவர் கூறினார். ஷோபா கரந்தலாஜேவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வருபவர்கள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் என அவர் பேசியது பலரை கொந்தளிக்க செய்துள்ளது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)