தமிழகம்
4 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கார் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே இன்று அதிகாலை வேகமாக வந்த கார் ஒன்று சிறிய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அருகில் போலீஸ் இருந்ததால் அதிலிருந்து டிரைவர் தப்பி ஓடினார்.
இதையடுத்து காரை சோதனை செய்ததில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் காரில் இருந்த தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்காவையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து நாற்றம்பள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கார் பெங்களூர் பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது நான்காவது முறையாக காரில் குட்கா கடத்தல் என்பது குறிப்பிடத்தக்கது.