கடந்த 2021ல் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் அப்போது கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆர்யன் கானை விடுவிக்க, ஷாருக்கானிடம் 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து, சமீர் வான்கடே, NCB-ன் கண்காணிப்பாளர் வி.வி சிங் உள்ளிட்டோருக்கு சொந்தமான 29 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதையடுத்து சமீர் வான்கடே உள்ளிட்டோர் மீது சதித்திட்டம், பணம் பறிக்க முயற்சி மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.