சினிமா
சினிமாவை விட்டு விலகினாரா பசங்க பட இயக்குனர்..?
பசங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். பின்னர் வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர்,தற்போது பெரிதளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.இந்த நிலையில் பாண்டிராஜ் கையில் நாத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.
இது குறித்து பேசிய இவர், எனது நண்பர் ஒரு நாள் நீ தேசிய விருது முதல் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கிவிட்டாய், இதனால் உனது பெற்றோர் ஆத்மா சாந்தியடையுமா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பாண்டிராஜ், அவர்கள் விவசாயம் செய்த நிலம் வீணாக கிடக்கிறது. அதானால் எப்படி நான் சந்தோஷமாக இருக்க முடியும் என செண்டிமெண்டாக விவசாயம் செய்ய முடிவெடுத்தேன் என்று கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login