தமிழகம்
காதலர்கள் படுத்திருந்த கட்டிலுக்கு அடியில் ரூம் பாய்…இறுதியில் நடந்த தரமான சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் காதல் திரைப்பட நடிகை சந்தியாவின் கணவர் வெங்கடேசனுக்கு சொந்தமான, பீச் ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 19ம் தேதி சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் இந்த பீச் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இதே பீச் ரிசார்ட்டில் ரூம்பாயாக வேலை பார்த்துவந்த சுபாஷ் என்ற இளைஞர் நள்ளிரவில் காதலர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று காதலியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பிறகு கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த சுபாஷை பார்த்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து பீச் ரிசார்ட்டில் தங்கியிருந்த இளைஞரின் நண்பர்கள் சுபாஷை அடித்து உதைத்து கூவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த சுபாஷை கைது செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சுபாஷின் செல்போனை சோதனையிட்டதில் பீச் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கிய பல்வேறு பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சுபாஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
You must be logged in to post a comment Login