Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.45லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.

தமிழகம்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.45லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.45லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி புல்லாவெளி கடற்கரையில் இன்று அதிகாலை 4 மணியளவில், க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி, வேல்ராஜ் தலைமை காவலர் ராமர், இருதயராஜ், இசக்கி, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்கரையில் நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனையிட்டனர்.

அதில், சுமார் 1½ டன் எடையுள்ள பீடி இலைகள் இருந்தது. இதையடுத்து மினி லாரி மற்றும் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

இலங்கையில் இதன் மதிப்பு 45 லட்சம் ஆகும். அதன் காரணமாக பீடி இலைகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. இந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top