Connect with us

Raj News Tamil

மறைந்த நடிகருக்கு மனம் நொந்த பாரதி ராஜா!

சினிமா

மறைந்த நடிகருக்கு மனம் நொந்த பாரதி ராஜா!

திரைத்துறையில் மிகப்பெரும் கலைஞனாக வந்திருக்க வேண்டியவன் என நடிகர் பாபு மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவா் நடிகர் பாபு. நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்ததால் அவர் எதிர்பாராத விபத்துக்குள்ளாகி முதுகுப் பகுதியில் அடிபட்டு படுத்த படுக்கையாகிப் போனார்.

இந்நிலையில், அவாின் இறப்புக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவன். படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த “என் உயிர் தோழன்” பாபுவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்’ எனக் கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top