தமிழகம்
துக்கம் விசாரிக்க பைக்கில் சென்ற இருவர் லாரி மோதி பலி..!!
தஞ்சை அருகே கன்னித்தோப்பு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான மதியழகன், முனியாண்டி, சுப்ரமணி ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்ள ஒன்றாக சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது புலவர் நத்தம் அருகில் பெட்ரோல் போடுவதற்காக சாலையை கடந்துள்ளனர். அப்போது எதிர்திசையில் வந்த லாரி இவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் சாலையில் விழுந்துள்ளனர்.
இதில் மதியழகன் (55), முனியாண்டி (60) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுப்ரமணியை அங்கு இருந்தவர்கள் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துக்கம் விசாரிக்க சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிர் இழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.