Connect with us

Raj News Tamil

சாணி, சகதியை கரைத்து மேலே ஊற்றி பிறந்தநாள் கொண்டாடிய நபர்கள்

தமிழகம்

சாணி, சகதியை கரைத்து மேலே ஊற்றி பிறந்தநாள் கொண்டாடிய நபர்கள்

பட்டாக்கத்திகளில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது, நடு சாலையில் போக்குவரத்தை மறித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது என நூதன முறையில் பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பான காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சேறு, சகதியை கரைத்து மேலே ஊற்றி பிறந்தநாள் கொண்டாடிய நபர்களின் செயல் கண்டனத்தைப் பெற்று வருகிறது.

நாமக்கல்லில் சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று அவருடைய பிறந்த நாள் எனபதால் அதனை கொண்டாட சக நண்பர்கள் அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு கார்த்திக்கை மின்கம்பத்தில் கட்டிப்போட்ட இளைஞர்கள் சாணி, முட்டை, சகதி கரைசல்களை அவர் மீது ஊற்றினர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மின்கம்பத்தில் கட்டி வைத்திருந்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More in தமிழகம்

To Top