Trending
காதலை ஏற்க மறுத்த பெண்.. நீதிமன்றம் வரை சென்ற தோழன்!
சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர் காவ்ஷிகன். இவர், நோரா என்ற பெண்ணை, கடந்த 2016-ஆம் ஆண்டு அன்று சந்தித்துள்ளார். அன்றில் இருந்து இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு அன்று, காவ்ஷிகன், தனது காதலை, நோராவிடம் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அதனை மறுத்த நோரா, தான் நட்பாக பழகி வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, கடும் மனஉளைச்சலில் இருந்த காவ்ஷிகன், வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த புகார் மனுவில், நோரா தன்னை மன அழுத்தத்தில் ஆழ்த்தியதாகவும், தொழில் வாழ்க்கையை சிதைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், 3 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை வரும் 9-ஆம் தேதி அmன்று நடத்தப்படும் என நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login