Connect with us

Raj News Tamil

அமலாக்கத்துறையின் செய்தித்தொடர்பாளர்களாக பாஜக: ராஜஸ்தான் முதல்வர்!

இந்தியா

அமலாக்கத்துறையின் செய்தித்தொடர்பாளர்களாக பாஜக: ராஜஸ்தான் முதல்வர்!

அமலாக்கத்துறையின் செய்தித்தொடர்பாளர்களாக பாஜக மட்டுமே பேசிக் கொண்டு இருக்கின்றது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சனிக்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“தேசிய ஜனநாயக கூட்டணி தவறு செய்கின்றது. நாடு அவர்களை மன்னிக்காது. தேர்தல் தொடங்கி விட்டது, இந்த நேரத்தில் அமலாக்கத்துறையினர் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். நாள் முழுவதும் அவர்களை நகரவிடாமல் செய்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் நிலையில் பாஜகவினர் சுதந்திரமாக பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.

நடைபெற இருக்கிற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தாலும் ஆச்சரியம் இல்லை. அமலாக்கத்துறை ஏன் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். அங்கு என்னனென்ன கண்டுபிடிக்கப்பட்டன என்பதை இதுவரைத் தெரிவிக்கவில்லை. அமலாக்கத்துறையின் செய்தித்தொடர்பாளர்களாக பாஜக மட்டுமே பேசிக் கொண்டு இருக்கின்றது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More in இந்தியா

To Top