இந்தியா
சொந்த கட்சியினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக நிர்வாகி கைது..!!
பீகார் மாநிலம் மதிப்பூரா மாவட்டத்தில் இன்று பாஜக கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவினர் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர்.
இதையடுத்து பங்கஜ் என்ற பாஜக நிர்வாகி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சக கட்சியினரை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர் அங்கிருந்து ஓடியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் சஞ்சய் பகத் என்ற பாஜக நிர்வாகியில் காலில் குண்டு பாய்ந்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக நிர்வாகி பங்கஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login