Connect with us

Raj News Tamil

கவிஞர் சினேகன் அளித்த புகார் : மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது

தமிழகம்

கவிஞர் சினேகன் அளித்த புகார் : மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது

நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

More in தமிழகம்

To Top