விளையாட்டு
சிஎஸ்கே வெற்றிக்கு பாஜகதான் காரணம்…அண்ணாமலை சொன்ன புதிய விளக்கம்
ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சென்னை அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் அதிக தமிழக வீரர்களை கொன்ற குஜராத் அணியை நாம் கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னை அணியை வெற்றி பெறச் செய்தது குஜராத்தை சேர்ந்த பாஜக கார்யகர்த்தா ஜடேஜா. அவரது மனைவி பாஜக சட்டமன்ற உறுப்பினர். தமிழக வீரர்களே இல்லாத சென்னை அணி, அதிக தமிழ் வீரர்களை கொண்ட குஜராத் அணியை கொண்டாட வேண்டும் என பேசினார்.
You must be logged in to post a comment Login