Connect with us

Raj News Tamil

நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பாஜக பரப்பிக் கொண்டிருக்கிறது – ராகுல் காந்தி பேச்சு

அரசியல்

நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பாஜக பரப்பிக் கொண்டிருக்கிறது – ராகுல் காந்தி பேச்சு

அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா(உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடியுள்ளோம். பாஜக நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்பிக் கொண்டிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்துகிறது.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை இழந்துவிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். கர்நாடகாவில் பாஜக தோற்கடிக்கப்பட்டது போல வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top