தமிழகம்
பெரம்பலூர் அருகே பாஜக பிரமுகரின் இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு
பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள ஈச்சம்பட்டி கிராமம், சஞ்சய் காந்தி, தெருவச் சேர்ந்தவர் பாலுசாமி மகன் தனபால்(50) கடந்த 2021 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த இவர், நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் முன் பகுதியில் தனது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு குடும்பத்தினருடன் தூங்கி விட்டார்.
இந்நிலையில் தனபால் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களும்
நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ பற்றி எரிவதை கண்டு, எதிர் வீட்டில் வசிக்கும் வரதராஜ்(40), என்பவர் கூச்சிலிட்டுள்ளார். சத்தம் கேட்டு தனபால் கதவை திறக்க முயற்சித்த போது, கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை திறந்து விட்டதோடு, தனபாலுடன் சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அனைத்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, பெரம்பலூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார் இருசக்கர வாகனம் எதனால் எரிக்கப்பட்டது? முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் நள்ளிரவு நேரத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம், அக்கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாது, ஈச்சம்பட்டி கிராமத்திலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.