பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேரந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழக மாநில பாஜக இளைஞர் அணி துணைத்தலைவாராக செயல்பட்டு வருகிறார்.

இவர் சென்னை – விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில் பத்திரப்பதிவு செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு வைத்தது. அவர் மோசடி செய்தது உறுதியான நிலையில் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.