Connect with us

Raj News Tamil

பாஜக-வினர் நன்றாக பொய் சொல்வார்கள்: மல்லிகார்ஜூன் கார்கே!

இந்தியா

பாஜக-வினர் நன்றாக பொய் சொல்வார்கள்: மல்லிகார்ஜூன் கார்கே!

பாஜக-வினர் நன்றாக பொய் சொல்வார்கள் என அனைத்து இந்தியர்களுக்கும் நன்றாகத் தெரியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘மோடி 2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என வாக்குறுதி அளித்திருந்தார். எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமான வீடு கிடைக்கும் எனக் கூறியிருந்தார். அனைவருக்கும் 24 மணிநேரமும் மின்சார விநியோகம் செய்யப்படும் எனக்கூறினார்.

ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. பாஜக-வினர் நன்றாக பொய் சொல்வார்கள் என அனைத்து இந்தியர்களுக்கும் நன்றாகத் தெரியும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

More in இந்தியா

To Top