Connect with us

Raj News Tamil

அருணாச்சலபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக!

தேர்தல் 2024

அருணாச்சலபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக!

அருணாசலபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

அருணாசலபிரதேசம் 60 பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் 32 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 2) எண்ணப்பட்டது.

இதில், அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சௌனா மெயின் உள்பட 10 பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் பவன் குமார் அறிவித்திருந்தார்.

இதையடுத்து மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 6 மணிக்கு தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஆட்சியமைக்க 31 தொகுதிகள் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் ஆளும் பாஜக 45 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் அருணாசலபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை களமிறக்கிய நிலையில், ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

More in தேர்தல் 2024

To Top