Connect with us

Raj News Tamil

மனைவிக்காக கோவில் வாசலில் காத்திருந்த பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை..!

இந்தியா

மனைவிக்காக கோவில் வாசலில் காத்திருந்த பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை..!

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபி நகருக்கு அருகே உள்ள கோவிலில் இருந்து தனது மனைவிக்காக காத்திருந்த பாஜக பிரமுகர் ஒருவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மறுத்தவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜகவினர் கூறியுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபர்களை விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். பாஜகவை சேர்ந்த பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top