Connect with us

Raj News Tamil

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரட்டை இலக்க சதவிகிதங்களில் வாக்குகள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர்!

இந்தியா

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரட்டை இலக்க சதவிகிதங்களில் வாக்குகள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர்!

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரட்டை இலக்க சதவிகிதங்களில் வாக்குகள் கிடைக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்துகொண்டார் பேசினார்.

அவர் பேசியதாவது;

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரட்டை இலக்க சதவிகிதங்களில் வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தேசிய அரசியலில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கூறுகையில், ‘‘தென்னிந்திய மாநிலங்களில் வரும் தேர்தலில் பாஜக கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் பெறும். தமிழகத்திலும் அதற்கு வியப்பிற்குரிய வகையில் இரண்டு இலக்க வாக்கு சதவிகிதம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது, எட்டு முதல் 12 சதவிதத்திற்கு இடையில் இருக்கும். இதில், வெற்றித் தொகுதிகள் எத்தனை இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. இதுவரையும் பாஜகவுக்கு ஐந்து சதவிகித வரை மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளன.’’ எனத் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top