Connect with us

Raj News Tamil

பாஜக இளைஞர் அணித்தலைவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை..!

அரசியல்

பாஜக இளைஞர் அணித்தலைவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை..!

பாஜக இளைஞர் அணித்தலைவரும், பஞ்சாயத்து துணைத்தலைவருமான பிரவீன் கம்மர் 7 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்த பிரவீன் கம்மர் (36) கோட்டூரில் நேற்று நள்ளிரவு 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் கோட்டூரில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை குறித்து பிரவீன் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த தகவலை பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார் அந்த பதிவில் “பிரவீன் கம்மர் கொலை செய்யப்பட்ட செய்தியை ஆழ்ந்த வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறேன். நேற்று இரவு அரசியல் எதிரிகளால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜகவை சேர்ந்தவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top